பொள்ளாச்சி அருகே மது குடிக்க பணம் தராததால் அண்ணனை கொலை செய்த தம்பி கைது..!

கோவை: பொள்ளாச்சி அருகே மது குடிக்க பணம் தர மறுத்த அண்ணனை ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த தம்பியை போலீஸார் கைது செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே மது குடிக்க பணம் தர மறுத்த அண்ணனை ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த தம்பியை போலீஸார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள பத்ரகாளியம்மன் கோயில் வீதி, நேரு நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(36). பெயிண்டர் ஆக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி ஐந்து குழந்தைகள் உள்ளனர். இவரது தம்பி கிருஷ்ணமூர்த்தி(34). இவரது அண்ணனுடன் சேர்ந்து பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தி இன்று அதிகாலை பணிக்குச் செல்லும் முன் மது அருந்த வேண்டும் என்று தனது அண்ணனிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆறுமுகம் மது குடிக்க பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி அருகில் இருந்த கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை அருகில் இருந்த உறவினர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.



ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் முன்னரே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீஸார், உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின்னர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...