திருப்பூர் அருகே பட்டா மாற்றித்தர பத்தாயிரம் லஞ்சம்... வட்டாட்சியர் கைது..!

திருப்பூர்: திருப்பூர் அருகே பட்டா மாற்றித் தருவதற்காக பத்தாயிரம் ஆயிரம் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக துணை வட்டாட்சியரை திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் அருகே பட்டா மாற்றித் தருவதற்காக பத்தாயிரம் ஆயிரம் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக துணை வட்டாட்சியரை திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரைச் சேர்ந்தவர் ராஜாமணி(52), விவசாயி. தனது இடத்திற்கு பட்டா மாறுதல் செய்ய பல்லடம் தாலுகா அலுவலகத்தை அணுகியிருக்கிறார். ராஜாமணியிடம் மண்டல துணை தாசில்தார் மேகநாதன்(48) என்பவர், பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். உடனே, திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் ராஜாமணி புகார் தெரிவித்தார்.



இதனைத்தொடர்ந்து, டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி தலைமையிலான போலீஸார் நேற்று ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். ஏற்கெனவே தாலுகா அலுவலகத்தில் காத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், ராஜாமணி பணத்தை கொடுக்கும் போது கையும் களவுமாக பிடித்தனர். அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதனால் இந்த அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...