மருதமலை மலை அடிவாரத்தில் பன்றி வேட்டை... நான்கு பேர் கைது..!

கோவை: கோவை மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள மலைப்பகுதியில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய நான்கு பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள மலைப்பகுதியில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய நான்கு பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வடவள்ளி மருதமலை அடிவாரத்தில், காட்டு பன்றியை வேட்டையாடிய நால்வரை, வனத்துறையினர் சிறையில் அடைத்தனர். கோவை வனச்சரக வனப்பகுதியை ஒட்டியுள்ள, மருதமலை, ஐ.ஓ.பி. காலனி, மீனாட்சி நகரில், நேற்று முன்தினம் இரவு காரில் வந்த, 4 பேர், சாலையில் சுற்றிய காட்டு பன்றியை நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். அங்கிருந்து தப்ப முயன்ற நால்வரையும், அருகில் இருந்த பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், காட்டுப்பன்றி வேட்டையாடியவர்கள் வடவள்ளி, முல்லை நகரை சேர்ந்த ராஜ்குமார்(43), சின்ன தடாகத்தை சேர்ந்த சசிகுமார்(47), பன்னிமடையைச் சேர்ந்த சம்பத்குமார், 39), நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த தேவராஜ்(55) என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து, வேட்டையாட பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி, கார் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷின் உத்தரவின் பெயரில், நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்து, போலீஸார் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...