கோவை: கோவையில் தே.மு.தி.க சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் கட்டுமானப் பொருட்கள் விலை ஏற்றத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: கோவையில் தே.மு.தி.க சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் கட்டுமானப் பொருட்கள் விலை ஏற்றத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவையில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உத்தரவுப்படி கோவை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் காட்டன் செந்தில் தலைமையில் தேமுதிகவினர் கைகளில் கொடியை ஏந்தியபடி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலைய வாசலில் கூடினர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அப்பொழுது அவர்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கட்டுமான பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்தும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய அரசே விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்து, பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்து சமையல் எரிவாயு விலை ஏறிப்போச்சு, விலைவாசி ஏற்றம் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் தாக்கம் மறுபக்கம், செத்து செத்துப் பிழைக்கிறனர் மக்கள், என தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.

இவை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தினகரன் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் சிவராமன், கோவை மாவட்ட அவைத்தலைவர் ரங்கராஜ் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் வனிதா, துரை உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கோவையில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உத்தரவுப்படி கோவை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் காட்டன் செந்தில் தலைமையில் தேமுதிகவினர் கைகளில் கொடியை ஏந்தியபடி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலைய வாசலில் கூடினர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அப்பொழுது அவர்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கட்டுமான பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்தும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய அரசே விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்து, பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்து சமையல் எரிவாயு விலை ஏறிப்போச்சு, விலைவாசி ஏற்றம் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் தாக்கம் மறுபக்கம், செத்து செத்துப் பிழைக்கிறனர் மக்கள், என தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.
இவை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தினகரன் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் சிவராமன், கோவை மாவட்ட அவைத்தலைவர் ரங்கராஜ் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் வனிதா, துரை உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.