கோவை: கோவை கிணத்துக்கடவில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், குறைந்த விலை மதுபானம் இருப்பு இல்லாததால் மதுப் பிரியர்கள் சோகமடைந்தனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், குறைந்த விலை மதுபானம் இருப்பு இல்லாததால் மதுப் பிரியர்கள் சோகமடைந்தனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் காரணத்தால் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, இன்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் 7 டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது.
டாஸ்மாக் கடை திறப்பால் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதுப் பிரியர்கள் வராததால் மதியம் 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது
இந்த நிலையில், ஒரு சில பேர் மட்டுமே மது வாங்க வந்தவர்கள் குறைந்த விலையான மதுபானங்கள் இல்லாததால் வாங்காமல் திரும்பிச் சென்றனர்.
இருப்பினும், டாஸ்மாக் கடைக்கு வருபவர்களுக்கு சானிடைசர் கைகளில் தெளிக்கப்பட்ட பின்னரே மதுபானங்கள் வழங்கப்பட்டது.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட நிலையில், மதுபானங்கள் இருப்பு இல்லாத காரணத்தாலும், அதிக விலையுடைய மதுபானங்கள் மட்டுமே இருப்பதால் மது விற்பனை மத்தமாகவே காணப்படுகிறது.