வால்பாறையில் இணையதளம் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் பெறப்பட்டது!

கோவை: வால்பாறையில் இணையதளம் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் பெறப்பட்டது.


கோவை: வால்பாறையில் இணையதளம் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் பெறப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்று காரணத்தினால் அரசு அலுவலகங்கள் இணையதளங்கள் மூலம் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக, மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் வருவாய் துறையினர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் வழங்க மக்கள் நேரடியாக வரவேண்டாம் என்று அறிவுறுத்தல் செய்து, ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் ஜமாபந்தி முகாமுக்கு நடத்தி பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.

இந்நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிற்கிணங்க மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனுக்களை வழங்காமல் பொது மக்கள் வசதிக்கேற்ப ஒவ்வொரு தாலுகா அலுவலகத்தில் இருந்து ஆன்லைன் மூலம் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வீடியோ பதிவு மூலம் அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்து மக்களுக்கு பதில் அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் கோவை மாவட்டத்தில் 11 தாலுகா நிலையங்களில் வட்டாட்சியர் மற்றும் மனுதாரர்கள் ஆன்லைன் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். தற்போது வால்பாறை பகுதியில் எட்டு மனுக்கள் பெறப்பட்டது.



அதில் வீடுகளுக்கு பட்டா வழங்கவும், வேலை வாய்ப்பு செய்து தரவும், குடியிருப்புக்கு அருகில் விழும் நிலையில் உள்ள மரங்களை வெட்டவும் மனுக்கள் வழங்கப்பட்டது.



இதில் வட்டாட்சியாளர் ராஜன் மற்றும் ஓய்வூதிய வட்டாட்சியர் முத்துக்குமார் ஆகியோர் பங்கு பெற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...