கோவை அரசு மருத்துவமனையில் ரோட்டரி கிளப் சார்பில் முதல் எக்மோ கருவி!

கோவை: கோவை அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி கிளப் சார்பில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான எக்மோ கருவி மருத்துவமனை முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது.


கோவை: கோவை அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி கிளப் சார்பில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான எக்மோ கருவி மருத்துவமனை முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர், அப்டவுண் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர், கிரீன் சிட்டி ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர், டி . எலைட், ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் 3201, ரோட்டரி பௌண்டேஷன உடன் இணைத்து ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான ECMO கருவி அன்பளிப்பாக வழங்கினர்.

இந்த கோவிட் பெருந்தொற்று காலத்தில் ECMO உயிர் காக்கும் கருவியாக உபயோக படுத்தப்படும். இதன் மூலம் மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் நமது கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதன் முதலாக இந்த கருவி நிறுவப்படுகிறது.

கடந்த ஆண்டு கோவிட் முதலாம் அலையின் போது, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மூன்று வெண்டிலேட்டர் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. ECMO கருவி - செயற்கை முறையில் இரத்த நாளங்களைத் தாண்டி இதயத்தை செயல்பட வைக்கும் செயற்கை உபகரணம். மூச்சுவிட முடியாத நிலையில், மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருந்தால் மூச்சு விடும் செயல்முறையை செயற்கையாக நிகழ்த்தப் பயன்படும் கருவிதான் எக்மோ கருவி Extra corporeal membrane oxygenator என்பதன் சுருக்கமே ECMO எனப்படுகிறது. இது மனித உயிரைக் காக்கும் நோக்கில் நவீன கருவியின் மூலம் அளிக்கப்படும் அதி உயர் சிகிச்சையாகும்.

கொரோனா சிகிச்சையில் எக்மோ கருவி சிறப்பாக உதவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த உயர்தர சிகிச்சையானது சாதாரண பொது மக்களுக்கு மிக அதிக அளவில் பயன்பட வேண்டும் என்றும் அதுவும் இலவசமாக மக்களுக்கு பயன்பட வேண்டும் என்றும் இந்த கருவி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...