கோவை: வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டதால் ஈச்சனாரி விநாயகர் திருக்கோவிலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவை: வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டதால் ஈச்சனாரி விநாயகர் திருக்கோவிலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தது. இருப்பினும் வழிபாட்டுத் தலங்களுக்கு வெளியில் நின்று மக்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று முதல் வழிபாட்டுத் தலங்களுக்கு உள்ளே சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள ஈச்சனாரி விநாயகர் திருக்கோவிலில் இன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனம் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனால் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கோவில்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஈச்சனாரி விநாயகர் திருக்கோவிலுக்கு குறைவான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தது. இருப்பினும் வழிபாட்டுத் தலங்களுக்கு வெளியில் நின்று மக்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று முதல் வழிபாட்டுத் தலங்களுக்கு உள்ளே சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள ஈச்சனாரி விநாயகர் திருக்கோவிலில் இன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனம் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனால் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கோவில்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஈச்சனாரி விநாயகர் திருக்கோவிலுக்கு குறைவான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.