பீளமேடு ‘பன் ரிபப்ளிக்' மால் இன்று திறப்பு..!

கோவை: கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைமுறையில் இருந்த ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டதை அடுத்து, பீளமேடு பகுதியில் அமைந்துள்ள ‘பன் ரிபப்ளிக் மால்' இன்று திறக்கப்பட்டது.



கோவை: கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைமுறையில் இருந்த ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டதை அடுத்து, பீளமேடு பகுதியில் அமைந்துள்ள ‘பன் ரிபப்ளிக் மால்' இன்று திறக்கப்பட்டது.

பீளமேடு பகுதியில் அமைந்துள்ள ‘பன் ரிபப்ளிக் மால்' இன்று திறக்கப்பட்டது. இதுகுறித்து, ‘பன் ரிபப்ளிக் மால்', மேலாளர், ராமகிருஷ்ணன், ‘‘கோவை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள ‘பன் ரிபப்ளிக் மால்' இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.



மால் வளாகத்தில் தூய்மைப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனைத்து பகுதிகளும் மிகவும் பாதுகாப்பான பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்க மாலுக்கு வருகை தரலாம். வளாகத்தில் அமைந்துள்ள சினிமா தியேட்டர்கள் மட்டும் அரசு உத்தரவின் காரணமாக செயல்படாது. மற்றபடி ‘புட் கோர்ட்' மற்றும் கடைகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும்.



வணிக வளாகத்துக்கு வருகை தரும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை தானியங்கி முறையில் மேற்கொள்ள நவீன கருவிகள் நுழைவாயில் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன.



தவிர, வாடிக்கையாளர்கள் விவரங்கள் பதிவேட்டில் தெரிவித்து அதை பதிவு செய்தபின் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். மால் வளாகத்தில் பணியாற்றும் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில், 50 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மீதமுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இன்று முதல் மீண்டும் மால் திறக்கப்பட்டுள்ள செய்தி மக்களிடம் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்'' என்று கூறினார்.







Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...