கோவை: புகைப்படக் கருவி விற்பனை நிலையத்தில் இரண்டரை லட்சம் மதிப்பிலான கேமிரா நூதன முறையில் திருடப்பட்டுள்ளது.
கோவை: புகைப்படக் கருவி விற்பனை நிலையத்தில் இரண்டரை லட்சம் மதிப்பிலான கேமிரா நூதன முறையில் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கிராஸ்கட் ரோடு வடகோவை மேம்பாலம் அருகே பிரேம்சந்தர் என்பவருக்கு சொந்தமாக லட்சுமி ஃபோட்டோ சென்டர் என்னும் புகைப்பட கருவிகள் விற்பனை நிலையம் மற்றும் சர்வீஸ் சென்டர் உள்ளது. இந்த கடையில், கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 1ம் தேதி அங்கு கேமரா வாங்குவதற்காக வாலிபர் ஒருவர் வந்துள்ளார். அவர் பேனாசோனிக் சிக்மா என்னும் கேமராவை கேட்டுள்ளார். பின்னர், அதை வாங்கிக் கொண்டு கேமராவை சோதித்துப் பார்ப்பதற்காக கடையை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அவரை பாலசுப்பிரமணியம் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில், அந்த நபர் அங்கிருந்து வேகமாக ஓடிச்சென்று கீழே இரு சக்கர வாகனத்தில் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி தயாராக இருந்த அவருடைய நண்பருடன் அங்கிருந்து கேமராவை திருடிக்கொண்டு சென்று விட்டார்.
பின்னர், இது சம்பந்தமாக பாலசுப்பிரமணியன் என்பவர் கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் இந்த திருட்டு சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். இதனைய தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து கேமராவை நூதனமாக திருடி சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.
கோவை கிராஸ்கட் ரோடு வடகோவை மேம்பாலம் அருகே பிரேம்சந்தர் என்பவருக்கு சொந்தமாக லட்சுமி ஃபோட்டோ சென்டர் என்னும் புகைப்பட கருவிகள் விற்பனை நிலையம் மற்றும் சர்வீஸ் சென்டர் உள்ளது. இந்த கடையில், கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 1ம் தேதி அங்கு கேமரா வாங்குவதற்காக வாலிபர் ஒருவர் வந்துள்ளார். அவர் பேனாசோனிக் சிக்மா என்னும் கேமராவை கேட்டுள்ளார். பின்னர், அதை வாங்கிக் கொண்டு கேமராவை சோதித்துப் பார்ப்பதற்காக கடையை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அவரை பாலசுப்பிரமணியம் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில், அந்த நபர் அங்கிருந்து வேகமாக ஓடிச்சென்று கீழே இரு சக்கர வாகனத்தில் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி தயாராக இருந்த அவருடைய நண்பருடன் அங்கிருந்து கேமராவை திருடிக்கொண்டு சென்று விட்டார்.
பின்னர், இது சம்பந்தமாக பாலசுப்பிரமணியன் என்பவர் கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் இந்த திருட்டு சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். இதனைய தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து கேமராவை நூதனமாக திருடி சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.