கோவை: வால்பாறையில் 54 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு அரசு பேருந்துகள் மீண்டும் இயங்க தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை: வால்பாறையில் 54 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு அரசு பேருந்துகள் மீண்டும் இயங்க தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் கடந்த 10.05.21 முதல் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கொரானா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததன் காரணமாக அரசு பேருந்துகளை இயக்க அரசு அறிவித்ததைத் தொடர்ந்து இன்று காலை முதல் அரசு பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ளன.

இந்நிலையில், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி, பழனி மற்றும் திருப்பூருக்கு 10 பேருந்துகளும் தேயிலைத் தோட்டப் பகுதிகளான முடீஸ், சோலையார் அணை, ஷேக்கல்முடி கருமலை, சக்தி எஸ்டேட. ரட் ஆகிய பகுதிகளுக்கு 14 பேருந்துகளும் என 24 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வால்பாறை அரசுப் போக்குவரத்துக் கழக கிளையிலிருந்து 24 பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. 54 நாட்கள் இடைவெளிக்குப்பின் பேருந்துகள் இயக்கப்படுவது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் கடந்த 10.05.21 முதல் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கொரானா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததன் காரணமாக அரசு பேருந்துகளை இயக்க அரசு அறிவித்ததைத் தொடர்ந்து இன்று காலை முதல் அரசு பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ளன.
இந்நிலையில், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி, பழனி மற்றும் திருப்பூருக்கு 10 பேருந்துகளும் தேயிலைத் தோட்டப் பகுதிகளான முடீஸ், சோலையார் அணை, ஷேக்கல்முடி கருமலை, சக்தி எஸ்டேட. ரட் ஆகிய பகுதிகளுக்கு 14 பேருந்துகளும் என 24 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வால்பாறை அரசுப் போக்குவரத்துக் கழக கிளையிலிருந்து 24 பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. 54 நாட்கள் இடைவெளிக்குப்பின் பேருந்துகள் இயக்கப்படுவது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.