கோவையில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான கிரிக்கெட் போட்டி




உலக மாற்று திறனாளிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை பங்கஜா மில்ஸ் மைதானத்தில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான மண்டல அளவிலான கிரிக்கெட்  போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கரூர், ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள்  பங்கேற்கின்றனர். 

இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டிகள் லீக் சுற்று முறையில் நடக்கிறது. ஒவ்வொரு அணியும் 20 ஓவர்கள் விளையாடுவர். இதில் அதிக புள்ளிகள் பெறும் அணிகள் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் விளையாடும் எனவும், இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி மாநில அளவிலான பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான அணியில் கலந்து கொள்ளும் என போட்டி ஒருங்கினைப்பாளர்கள் தெரிவித்தனர். 



மேலும் இப்போட்டியில் பங்கேற்பவர்கள்  100 சதவீதம் பார்வை குறைபாடு உள்ளவர்கள், 60 சதவீதம் மற்றும் 40 சதவீதம் பார்வை குறைபாடு உள்ளவர்கள் என 3 பிரிவுகளாக ஒவ்வொரு போட்டிகளிலும் 14 வீரர்கள்  பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்தனர். ஒலி எழுப்பும் பிளாஸ்டிக் பந்துகள் இப்போட்டிக்கு உபயோகிக்க  படுவதாக தெரிவித்தவர்கள் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை பரஸ்பரம் தனியார் தொண்டு நிறுவனம் சுடர் ஒளி மற்றும் தமிழ்நாடு பார்வையற்றோர் கழகம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனர்.நாளை மாலை இறுதி போட்டிக்கு பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...