கோவை மாநகராட்சியில் நான்கு லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன... சுகாதாரத்துறை தகவல்..!

கோவை: கோவை மாநகராட்சி சுகாதார மையங்களில் இதுவரை நான்கு லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சி சுகாதார மையங்களில் இதுவரை நான்கு லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரம்பகாலத்தில் அரசு ஆஸ்பத்திரி, மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரி, பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி, நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய நான்கு மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்தது. பின்னர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் மூலமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்திருந்தது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோவை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஊரக பகுதிக்கும் முக்கியத்துவம் அளித்து தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்படி, மாநகராட்சி சுகாதார நிலையங்களின் மூலம் மட்டும் தற்போது வரை நான்கு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது'' என்று கூறினர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...