கோவையில் கொரோனாவால் மகன் இறந்த விரக்தி... விஷம் குடித்து தந்தை தற்கொலை..!

கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் மகன் இறந்ததைத் தாங்கிக்கொள்ள இயலாத முதியவரான தந்தை விரக்தியில், விஷம் குடித்து பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டார்.


கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் மகன் இறந்ததைத் தாங்கிக்கொள்ள இயலாத முதியவரான தந்தை விரக்தியில், விஷம் குடித்து பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டார்.

பொள்ளாச்சி பழனியப்பன் வீதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி வயது 82. இவருக்கு இரண்டு மகன்கள். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அய்யாசாமியின் இரண்டாவது மகன் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். இந்தநிலையில், அய்யாசாமி கடந்த சில நாட்களாகவே மனவேதனையுடன் இருந்து வந்தார். நேற்று, விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த சாணி பவுடரை குடித்து மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு, கோவை அரசு ஆஸ்பத்திரி சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...