நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் கிராமத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி போக்கு காட்டி வந்த கரடி, வனத்துறையினரிடம் இன்று(சனிக் கிழமை) பிடிபட்டது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் கிராமத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி போக்கு காட்டி வந்த கரடி, வனத்துறையினரிடம் இன்று(சனிக் கிழமை) பிடிபட்டது.
கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன், கேர்கம்பை, இந்திரா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு மற்றும் தேயிலைத் தோட்டங்களில் கரடி உலா வந்து பொது மக்களை அச்சுறுத்தி போக்கு காட்டி வந்தது. இந்தநிலையில், கரடியைப் பிடிக்க ஒருமாத காலமாக மிளிதேன் பகுதியில் இரும்புக் கூண்டில் பழங்கள் முதலான உணவுப் பொருட்கள் வைத்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை கரடி கூண்டிற்குள் சிக்கியது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா தலைமையிலான வனத்துறையினர், அதிவிரைவு வன காவலர்கள் கரடியை ஆய்வு செய்தனர். கூண்டிற்குள் சிக்கிய கரடி கூண்டை சேதப்படுத்தி தப்பிக்க முயற்சித்ததால் விரல்களில் காயம் ஏற்பட்டிருந்தது.

பின்பு வனத்துறையினர் கரடியை லாரியின் மூலம் ஏற்றிச் சென்று, கோரக்குந்தா அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். பிடிபட்டது பெண்கரடி என்றும் அதன் குட்டி கரடி இப்பகுதியில் சுற்றிவருவதால், அதனையும் பிடிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன், கேர்கம்பை, இந்திரா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு மற்றும் தேயிலைத் தோட்டங்களில் கரடி உலா வந்து பொது மக்களை அச்சுறுத்தி போக்கு காட்டி வந்தது. இந்தநிலையில், கரடியைப் பிடிக்க ஒருமாத காலமாக மிளிதேன் பகுதியில் இரும்புக் கூண்டில் பழங்கள் முதலான உணவுப் பொருட்கள் வைத்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை கரடி கூண்டிற்குள் சிக்கியது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா தலைமையிலான வனத்துறையினர், அதிவிரைவு வன காவலர்கள் கரடியை ஆய்வு செய்தனர். கூண்டிற்குள் சிக்கிய கரடி கூண்டை சேதப்படுத்தி தப்பிக்க முயற்சித்ததால் விரல்களில் காயம் ஏற்பட்டிருந்தது.
பின்பு வனத்துறையினர் கரடியை லாரியின் மூலம் ஏற்றிச் சென்று, கோரக்குந்தா அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். பிடிபட்டது பெண்கரடி என்றும் அதன் குட்டி கரடி இப்பகுதியில் சுற்றிவருவதால், அதனையும் பிடிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.