கோவையில் பிரதமர் மோடி பிளக்ஸ் பேனரை அகற்றும் காவல் துறையை கண்டித்து காவல் ஆணையர் மற்றும் கலெக்டரிடம் பாஜக மனு..!

கோவை: கோவையில் தடுப்பூசி செலுத்தும் இடத்தில் பிரதமர் மோடியின் ஃபிளக்ஸ் பேனரை அகற்றும் காவல் துறையை கண்டித்து காவல் ஆணையர் மற்றும் கலெக்டரிடம் பாஜக சார்பாக மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவையில் தடுப்பூசி செலுத்தும் இடத்தில் பிரதமர் மோடியின் ஃபிளக்ஸ் பேனரை அகற்றும் காவல் துறையை கண்டித்து காவல் ஆணையர் மற்றும் கலெக்டரிடம் பாஜக சார்பாக மனு அளிக்கப்பட்டது.



கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் நந்தகுமார் தலைமையில் கோவை வழக்கறிஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் மற்றும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் ஆகியோரிடம் மனு ஒன்றை கொடுத்தனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த நந்தகுமார், ‘‘பிரதமர் மோடி, இந்தியா முழுவதிலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடுவதற்கு உத்தரவிட்டுள்ளார். அதற்காக எந்தப் பாகுபாடுமின்றி அனைத்து மாவட்டங்களுக்கும் தடுப்பூசிகள் முறையாகப் பிரித்து அனுப்பப்படுகிறது.

இந்தநிலையில், கோவையில் தடுப்பூசி போடப்படும் இடங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக வைக்கப்பட்டுள்ள நரேந்திர மோடியின் ஃபிளக்ஸ் பேனர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். ஆனால், திமுகவின் பேனர்களை அவர்கள் அப்புறப்படுத்தவில்லை. இது ஒருதலைப்பட்ச செயலாக இருக்கிறது. உடனடியாக மாநில அரசு தலையிட்டு அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். எந்தக் கட்சியினரும் தடுப்பு ஊசி போடக் கூடிய இடத்தில் தங்களுடைய ஃபிளக்ஸ் பேனர்களை வைக்கக் கூடாது என அறிவிக்க வேண்டும். எங்களுடைய ஃபிளக்ஸ் பேனர்களை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் விரைவில் போராட்டத்தில் இறங்குவோம்'' எனக் கூறினார். அப்போது, நூற்றுக்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா வழக்கறிஞர்கள் அணி சார்பாக பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...