வால்பாறையில் படிக்கட்டு போல் கட்டப்பட்டுள்ள புதிய பாலங்கள்..! விபத்து ஏற்படும் முன்பு சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை!

கோவை: வால்பாறையில் படிக்கட்டு போல் கட்டப்பட்டுள்ள புதிய பாலங்களை விபத்து ஏற்படும் முன்பு சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் படிக்கட்டு போல் கட்டப்பட்டுள்ள புதிய பாலங்களை விபத்து ஏற்படும் முன்பு சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கன மழை காலங்களில் மழை நீர் சாலைகளில் தேங்கி உள்ளதால் வாகனங்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அவ்வப்போது, தார் சாலை வழி தெரியாமல் விபத்து ஏற்பட்டு வருகின்றன.

இதனிடையே, வால்பாறை அருகே ரொட்டிக்கடை பகுதியிலிருந்து சோலையார் அணை செல்லும் வழியில் 6 பாலங்கள் கட்டப்பட்டு உள்ளது.



இதில் தண்ணீர் சாலைகளில் நிற்காமல் இருப்பதற்காக சாலையின் குறுக்கே ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையை தோண்டி பெரிய குழாய் அமைத்து தண்ணீரை சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு செல்வதற்காக அமைக்கப்பட்டது.



இந்த நிலையில், தற்போது பணி நிறைவடைந்து பல நாட்கள் ஆகியும் 6 பாலங்களில் படிக்கட்டு போன்று காணப்படுவதாலும், முன்னெச்சரிக்கை பலகை இல்லாமலும் இரவு நேரங்களில் வருபவர்களுக்கு ரிஃப்ளெஸ் லைட் மூலம் சாலை பழுது அடைந்துள்ளது என்று தெரியப்படுத்தாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக ஒப்பந்ததாரர் பார்த்திபன் என்பவர் இந்த பணியை செய்து வருகிறார்.



இந்த நிலையில், விபத்து ஏற்படுவதற்கு முன் இந்த பாலப் பணிகளை நிறைவு செய்யவும், மக்களுக்கு முன்னெச்சரிக்கை பதாகைகள் வைத்தும், வேகத்தடைகள் மற்றும் முன்னெச்சரிக்கை விளக்குகளை பொருத்தி பணியை செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...