கோவை: திருமணமான ஐந்து வருடத்தில் பெண் ஒருவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை: திருமணமான ஐந்து வருடத்தில் பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவையை அடுத்த துடியலூர் நேருவீதியைச் சேர்ந்தவர் சபீர். இவர் ஒரு வியாபாரி ஆவார். இவருடைய மனைவி சபானா (23), இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சபாவின் வீட்டுக்கு அவருடைய தந்தை முகமது கவுஸ் வந்தார்.
அப்போது, வீட்டில் இருந்தவர்கள் சபானா அறைக்குள் இருப்பதாக தெரிவித்தனர். அவரது அறைக்குச் சென்று திறக்க முயன்றார். கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாகப் பார்த்தார். அப்பொழுது மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. அதைப் பார்த்து அவர் கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதனையடுத்து, பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சபானா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து துடியலூர் போலீசார் 174 சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில், திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவையை அடுத்த துடியலூர் நேருவீதியைச் சேர்ந்தவர் சபீர். இவர் ஒரு வியாபாரி ஆவார். இவருடைய மனைவி சபானா (23), இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சபாவின் வீட்டுக்கு அவருடைய தந்தை முகமது கவுஸ் வந்தார்.
அப்போது, வீட்டில் இருந்தவர்கள் சபானா அறைக்குள் இருப்பதாக தெரிவித்தனர். அவரது அறைக்குச் சென்று திறக்க முயன்றார். கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாகப் பார்த்தார். அப்பொழுது மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. அதைப் பார்த்து அவர் கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதனையடுத்து, பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சபானா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து துடியலூர் போலீசார் 174 சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில், திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.