கோவை: உலக புலிகள் தினத்தை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் போட்டிகள் நடைபெற்றது.
கோவை: உலக புலிகள் தினத்தை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் போட்டிகள் நடைபெற்றது.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு, வனத்துறை மூலமாக உலக புலிகள் தினத்தில் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டும், இந்த ஆண்டும், இணையவழி மூலம் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு இந்தப் போட்டியில் பங்கு பெற பள்ளி மாணவர்களுக்கு ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் பங்கு பெறும் மாணவர்கள் வகுப்பு மற்றும் பள்ளி பெயருடன் அவர்கள் கலந்து கொண்ட போட்டியின் காணொளிக் காட்சியை இணையவழி மூலம் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஓவியப்போட்டி (drawing) (புலியின் வாழ்விடம்), முகச்சாயல் (face painting) (புலியின் உருவம்) போட்டி, பாடல் போட்டி (rhymes) (உங்கள் பார்வையில் புலி) ஆகியவையும், 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி (elecution) (வனத்தின் காவலன் புலி), முகச்சாயம் (புலியின் உருவம்), கவிதை போட்டி (புலியின் அழகு), கைவினைப் போட்டி (புலியின் உருவம்) ஆகியவையும், மேலும் 9 முதல் 10ம்வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி (நவீன உலகில் புலிகளின் பாதுகாப்பு), முகச்சாயல் (புலியின் உருவம்), கவிதைப்போட்டி (சங்க இலக்கியத்தில் புலி) கைவினை போட்டி (புலி உருவம்) போட்டி ஆகிய போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் தாங்கள் பங்குபெறும் போட்டிகளின் காணொளியை இணையவழி மூலம் ஜூலை 1 முதல் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் [email protected] என்ற இணைய வழி முகவரி அல்லது 9080775768 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பலாம் என்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு, வனத்துறை மூலமாக உலக புலிகள் தினத்தில் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டும், இந்த ஆண்டும், இணையவழி மூலம் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு இந்தப் போட்டியில் பங்கு பெற பள்ளி மாணவர்களுக்கு ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் பங்கு பெறும் மாணவர்கள் வகுப்பு மற்றும் பள்ளி பெயருடன் அவர்கள் கலந்து கொண்ட போட்டியின் காணொளிக் காட்சியை இணையவழி மூலம் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஓவியப்போட்டி (drawing) (புலியின் வாழ்விடம்), முகச்சாயல் (face painting) (புலியின் உருவம்) போட்டி, பாடல் போட்டி (rhymes) (உங்கள் பார்வையில் புலி) ஆகியவையும், 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி (elecution) (வனத்தின் காவலன் புலி), முகச்சாயம் (புலியின் உருவம்), கவிதை போட்டி (புலியின் அழகு), கைவினைப் போட்டி (புலியின் உருவம்) ஆகியவையும், மேலும் 9 முதல் 10ம்வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி (நவீன உலகில் புலிகளின் பாதுகாப்பு), முகச்சாயல் (புலியின் உருவம்), கவிதைப்போட்டி (சங்க இலக்கியத்தில் புலி) கைவினை போட்டி (புலி உருவம்) போட்டி ஆகிய போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் தாங்கள் பங்குபெறும் போட்டிகளின் காணொளியை இணையவழி மூலம் ஜூலை 1 முதல் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் [email protected] என்ற இணைய வழி முகவரி அல்லது 9080775768 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பலாம் என்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.