உலக புலிகள் தினத்தை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் போட்டிகள்..!

கோவை: உலக புலிகள் தினத்தை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் போட்டிகள் நடைபெற்றது.


கோவை: உலக புலிகள் தினத்தை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் போட்டிகள் நடைபெற்றது.

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு, வனத்துறை மூலமாக உலக புலிகள் தினத்தில் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டும், இந்த ஆண்டும், இணையவழி மூலம் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு இந்தப் போட்டியில் பங்கு பெற பள்ளி மாணவர்களுக்கு ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் பங்கு பெறும் மாணவர்கள் வகுப்பு மற்றும் பள்ளி பெயருடன் அவர்கள் கலந்து கொண்ட போட்டியின் காணொளிக் காட்சியை இணையவழி மூலம் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஓவியப்போட்டி (drawing) (புலியின் வாழ்விடம்), முகச்சாயல் (face painting) (புலியின் உருவம்) போட்டி, பாடல் போட்டி (rhymes) (உங்கள் பார்வையில் புலி) ஆகியவையும், 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி (elecution) (வனத்தின் காவலன் புலி), முகச்சாயம் (புலியின் உருவம்), கவிதை போட்டி (புலியின் அழகு), கைவினைப் போட்டி (புலியின் உருவம்) ஆகியவையும், மேலும் 9 முதல் 10ம்வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி (நவீன உலகில் புலிகளின் பாதுகாப்பு), முகச்சாயல் (புலியின் உருவம்), கவிதைப்போட்டி (சங்க இலக்கியத்தில் புலி) கைவினை போட்டி (புலி உருவம்) போட்டி ஆகிய போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் தாங்கள் பங்குபெறும் போட்டிகளின் காணொளியை இணையவழி மூலம் ஜூலை 1 முதல் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் [email protected] என்ற இணைய வழி முகவரி அல்லது 9080775768 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பலாம் என்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...