கோவை: கோவை விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை வந்த ஏர் அரேபியா விமானத்தில் 8 கிலோ தங்கம் கடத்தி வந்த 6 பேரை சுங்க இலாகா போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவை விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை வந்த ஏர் அரேபியா விமானத்தில் 8 கிலோ தங்கம் கடத்தி வந்த 6 பேரை சுங்க இலாகா போலீசார் கைது செய்தனர்.
தினமும் காலை மாலை என இரண்டு வேளை, சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் கோவை வந்து செல்கிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் சார்ஜாவில் இருந்து புறப்பட்ட ஏர் அரேபியா விமானம் காலை கோவை விமான நிலையம் வந்தடைந்தது.
பயணிகள் அனைவரையும் சுங்க இலாகா அதிகாரிகள் பரிசோதனை செய்து அனுப்பிய படி இருந்த போது, 6 பேர் மிகவும் அச்சத்தோடும் பார்பதற்கு பதட்டதுடனும் காணப்பட்டதால், சந்தேகம் ஏற்பட்ட சுங்க இலாகா துறையினர் மற்றும் விமான நிலைய காவல்துறையினர் அவர்களை சோதனையிட்டனர். அப்போது கணக்கில் வராமல் மறைத்து எடுத்து வரப்பட்ட 8 கிலோ தங்க நகைகள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர், அந்த 6 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமும் காலை மாலை என இரண்டு வேளை, சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் கோவை வந்து செல்கிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் சார்ஜாவில் இருந்து புறப்பட்ட ஏர் அரேபியா விமானம் காலை கோவை விமான நிலையம் வந்தடைந்தது.
பயணிகள் அனைவரையும் சுங்க இலாகா அதிகாரிகள் பரிசோதனை செய்து அனுப்பிய படி இருந்த போது, 6 பேர் மிகவும் அச்சத்தோடும் பார்பதற்கு பதட்டதுடனும் காணப்பட்டதால், சந்தேகம் ஏற்பட்ட சுங்க இலாகா துறையினர் மற்றும் விமான நிலைய காவல்துறையினர் அவர்களை சோதனையிட்டனர். அப்போது கணக்கில் வராமல் மறைத்து எடுத்து வரப்பட்ட 8 கிலோ தங்க நகைகள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர், அந்த 6 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.