கோவை: கோவை, நீலம்பூர் -மதுக்கரை பை-பாஸ் அருகே லாரியை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த ஊராட்சி அதிகாரி, லாரி திடீரென பிரேக் போட்டதால் நிலைதடுமாறி லாரியின் பின் பகுதியில் மோதி, சக்கரத்தில் தலை நசுங்கி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை, நீலம்பூர் -மதுக்கரை பை-பாஸ் அருகே லாரியை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த ஊராட்சி அதிகாரி, லாரி திடீரென பிரேக் போட்டதால் நிலைதடுமாறி லாரியின் பின் பகுதியில் மோதி, சக்கரத்தில் தலை நசுங்கி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- போத்தனூர், நீலம்பூர் -மதுக்கரை பை-பாஸ் சாலையில் நேற்று காலை லாரி ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜெ.ஜெ., நகர் பாலம் அருகே வரும்போது டிரைவர் 'பிரேக்' போட்டுள்ளார். தொடர்ந்து வந்த ஒரு பைக் லாரியின் பின்புறம் மோதியது. இதில், பைக்கில் வந்தவர் கீழே விழ, லாரியின் பின் சக்கரம் அந்நபரின் தலையில் ஏறியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
செட்டிபாளையம் போலீசார் சடலத்தை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்தால் சிறிது நேரம் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விசாரணையில், இறந்தவர் கணியூரை சேர்ந்த சுரேஷ்குமார், 52 என்பதும் அவர் ஆத்து பொள்ளாச்சி ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், லாரி டிரைவர் மகேந்திரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- போத்தனூர், நீலம்பூர் -மதுக்கரை பை-பாஸ் சாலையில் நேற்று காலை லாரி ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜெ.ஜெ., நகர் பாலம் அருகே வரும்போது டிரைவர் 'பிரேக்' போட்டுள்ளார். தொடர்ந்து வந்த ஒரு பைக் லாரியின் பின்புறம் மோதியது. இதில், பைக்கில் வந்தவர் கீழே விழ, லாரியின் பின் சக்கரம் அந்நபரின் தலையில் ஏறியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
செட்டிபாளையம் போலீசார் சடலத்தை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்தால் சிறிது நேரம் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விசாரணையில், இறந்தவர் கணியூரை சேர்ந்த சுரேஷ்குமார், 52 என்பதும் அவர் ஆத்து பொள்ளாச்சி ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், லாரி டிரைவர் மகேந்திரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.