சிங்காநல்லூர் அருகே பெண்ணை தாக்கி 12 பவுன் நகை பறிப்பு; 3 பேர் கைது

கோவை: கோவை சிங்காநல்லூர் எஸ் ஐ எச் எஸ் காலனியைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவரிடம், நான்கு பேர் கொண்ட கும்பல் முகத்தை துணியால் மூடிக்கொண்டு வீட்டுக்குள் புகுந்து, அவரை தாக்கிவிட்டு 12 சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு சம்பவத்தில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் எஸ் ஐ எச் எஸ் காலனியைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவரிடம், நான்கு பேர் கொண்ட கும்பல் முகத்தை துணியால் மூடிக்கொண்டு வீட்டுக்குள் புகுந்து, அவரை தாக்கிவிட்டு 12 சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு சம்பவத்தில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்துள்ள நிலையில், வழக்கு குறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் உமா விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையில், வழக்கில் தொடர்புடைய ஆர்.எஸ். புரம் நியூ ஸ்கீம் ரோடு சேர்ந்த தினேஷ் குமார் 26, சின்னவேடம்பட்டியை சேர்ந்த சரவணகுமார் 26, தெலுங்கு பாளையத்தைச் சேர்ந்த அசோக் குமார் 28, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், வழக்கில் தொடர்புடைய கும்பலின் தலைவன் உட்பட 4 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். பிடிபட்ட குற்றவாளிகள், ஏற்கனவே கோவை மாநகரத்தில் சில இடங்களில் பொதுமக்களை மிரட்டி நகை திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...