கோவை: வால்பாறை அருகே கரடி தாக்கியதில் ஒருவருக்கு லேசான காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை: வால்பாறை அருகே கரடி தாக்கியதில் ஒருவருக்கு காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை போன்ற வன விலங்குகள் காணப்படுகின்றன. யானைகள் மற்றும் சிறுத்தைகள் அவ்வப்போது பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் இதனால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு வால்பாறை அருகே வேவர்லி எஸ்டேட் பகுதியில் குடியிருக்கும் சதீஷ் என்பவர் வால்பாறையில் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவர் வேலை முடித்து விட்டு இரவு சுமார் 7 மணியளவில் இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று உள்ளார்.
அப்போது, வனப்பகுதி அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் இருந்து கரடி ஒன்று அவர் வாகனத்தின் மீது தாவி தாக்கி உள்ளது. அப்போது அவர் சத்தம் போட்டதால் கரடி அவரைவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது.

பின்னர், எஸ்டேட் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்ற அவர், வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை போன்ற வன விலங்குகள் காணப்படுகின்றன. யானைகள் மற்றும் சிறுத்தைகள் அவ்வப்போது பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் இதனால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு வால்பாறை அருகே வேவர்லி எஸ்டேட் பகுதியில் குடியிருக்கும் சதீஷ் என்பவர் வால்பாறையில் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவர் வேலை முடித்து விட்டு இரவு சுமார் 7 மணியளவில் இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று உள்ளார்.
அப்போது, வனப்பகுதி அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் இருந்து கரடி ஒன்று அவர் வாகனத்தின் மீது தாவி தாக்கி உள்ளது. அப்போது அவர் சத்தம் போட்டதால் கரடி அவரைவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது.
பின்னர், எஸ்டேட் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்ற அவர், வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.