கோவை: வால்பாறை ஆதிவாசி பழங்குடியினர் கிராமங்களில் உள்ள மக்களுக்கு கொரோனா பெருந்தொற்று தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கோவை: வால்பாறை ஆதிவாசி பழங்குடியினர் கிராமங்களில் உள்ள மக்களுக்கு கொரோனா பெருந்தொற்று தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருகிற நிலையில், அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.

வால்பாறை சுற்று வட்டாரப் பகுதியில் சுமார் 2,500-க்கும் மேல் ஆதிவாசி பழங்குடியின மக்கள் உள்ளனர். இவர்கள் தற்போது வரை முழுமையாக தடுப்பூசி போடவில்லை என்று மருத்துவ வட்டாரத்தில் தெரியவருகிறது. இதை வலியுறுத்தி ஆதிவாசி பழங்குடியினர் கிராமங்களில் உள்ள மக்கள் கொரோனா நோய் பற்றியும் அதைத் தடுக்க, தடுப்பூசி செலுத்துவதை குறித்தும் மேலும் அவர்களுக்கு சளி, காய்ச்சல், தலைவலி போன்றவை ஏற்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்ய வனத் துறை சார்பாக வனத்துறையினரும் தன்னார்வலர்கள் இணைந்து வால்பாறையில் உள்ள நெடுங்குன்றம் பூனாட்சி செட்டில்மெண்ட் பகுதிகளில் ஆய்வு செய்து தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருகிற நிலையில், அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.
வால்பாறை சுற்று வட்டாரப் பகுதியில் சுமார் 2,500-க்கும் மேல் ஆதிவாசி பழங்குடியின மக்கள் உள்ளனர். இவர்கள் தற்போது வரை முழுமையாக தடுப்பூசி போடவில்லை என்று மருத்துவ வட்டாரத்தில் தெரியவருகிறது. இதை வலியுறுத்தி ஆதிவாசி பழங்குடியினர் கிராமங்களில் உள்ள மக்கள் கொரோனா நோய் பற்றியும் அதைத் தடுக்க, தடுப்பூசி செலுத்துவதை குறித்தும் மேலும் அவர்களுக்கு சளி, காய்ச்சல், தலைவலி போன்றவை ஏற்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்ய வனத் துறை சார்பாக வனத்துறையினரும் தன்னார்வலர்கள் இணைந்து வால்பாறையில் உள்ள நெடுங்குன்றம் பூனாட்சி செட்டில்மெண்ட் பகுதிகளில் ஆய்வு செய்து தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு செய்தனர்.