வார இறுதியில் போலீஸாருக்கு விடுமுறை வழங்கப்படும் - கோவை கமிஷனர் தீபக் தாமோர் தகவல்..!

கோவை: அரசு ஊழியர்களைப் போலவே வாரத்தின் இறுதி நாளில் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என கோவை மாநகர போலீஸ் ஆணையர் தீபக் தாமோர் தெரிவித்துள்ளார்.


கோவை: அரசு ஊழியர்களைப் போலவே வாரத்தின் இறுதி நாளில் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என கோவை மாநகர போலீஸ் ஆணையர் தீபக் தாமோர் தெரிவித்துள்ளார்.

சுழற்சி முறையில் தற்போது போலீஸார் பணியாற்றி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நான்கு நாட்கள் பணிபுரியக்கூடிய காவலர்களுக்கு அரசு ஊழியர்களைப் போலவே வாரத்தின் இறுதி நாளில் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என கோவை மாநகர போலீஸ் ஆணையர் தீபக் தாமோர் தெரிவித்துள்ளார். கோவை போலீஸாருக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதில் போலீஸாரின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது.

தினமும் இரவு, பகலாக விடுமுறை இல்லாமல் போலீஸார் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்த பணிச்சுமையால் பலரும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டனர். கோவையில் போலீஸாருக்கு சுழற்சி முறையில் விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, நான்கு நாள் பணி செய்யும் போலீஸார், ஒரு நாள் விடுப்பு அளித்து ஓய்வு எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. கோவை போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் கூறுகையில், ‘‘போலீஸாருக்கு சுழற்சி முறையில் விடுமுறை வழங்கப்படுகிறது. மற்ற அரசு ஊழியர்களைப் போல், போலீஸாருக்கும் வார இறுதி நாட்களில் விடுமுறை எடுக்கும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...