கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சிங்கையனபுதூரில் அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சிங்கையனபுதூரில் அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொரனோ தொற்று பாதிப்பு குறையாத காரணத்தால் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மது பிரியர்கள் அண்டை மாநிலமான கேரளாவுக்குச் சென்று மதுபாட்டில் வாங்கி வந்து தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் நேற்று மாலை சிங்கையன்புதூர் பேருந்து நிலையம் முன்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
அப்போது, அவ்வழியாக வந்த நபரிடம் சோதனை செய்தபோது, அவரிடம் மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரிடம் இருந்த 15 குவாட்டர், 4 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனைக்கு கொண்டு வந்த சிங்கையன்புதூர் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரனோ தொற்று பாதிப்பு குறையாத காரணத்தால் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மது பிரியர்கள் அண்டை மாநிலமான கேரளாவுக்குச் சென்று மதுபாட்டில் வாங்கி வந்து தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் நேற்று மாலை சிங்கையன்புதூர் பேருந்து நிலையம் முன்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
அப்போது, அவ்வழியாக வந்த நபரிடம் சோதனை செய்தபோது, அவரிடம் மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரிடம் இருந்த 15 குவாட்டர், 4 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனைக்கு கொண்டு வந்த சிங்கையன்புதூர் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.