கோவை சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் தின கொண்டாட்டம்..! மருத்துவர்களுக்கு பாராட்டு!

கோவை: நாடு முழுவதும் இன்று ஜூலை 1 மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.


கோவை: நாடு முழுவதும் இன்று ஜூலை 1 மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி, கோவை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள முத்தூஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் முத்தூஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் முத்து சரவணகுமார் தலைமை தாங்கினார்.

இந்த விழாவில் அரிமா சங்கங்கள் மாவட்ட ஆளுநர் குப்புசாமி மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலையால் 798 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அதன் எதிரொலியாக நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக மருத்துவர்களுடைய ஆன்மாக்கள் சாந்தியடைய கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.



இதை தொடர்ந்து, முத்தூஸ் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து 500க்கும் மேற்பட்ட நோயாளிகளை 100 சதம் குணப்படுத்திய மருத்துவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து கௌரவிக்கப்பட்டது. மருத்துவமனை தலைவர் டாக்டர் முத்து சரவணன் சார்பில் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 5 குடும்பங்களுக்கு கல்வி உதவித் தொகையாக ஒரு லட்சம் வழங்கப்பட்டது.

மேலும், சரவணம்பட்டி ஓசனம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மருத்துவமனை இயக்குனர் செல்வகுமார் அவர்களால் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பல்வேறு துறை மருத்துவர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இரண்டாம் அலையில் குணம் பெற்ற குடும்பத்தினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...