கோவையில் பொது வழி ஆக்கிரமிப்பு: கலெக்டருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..!

கோவை: கோவை காமராஜபுரத்தில் தூய்மைப் பணியாளர்களின் குடியிருப்புக்கு செல்லும் வழியை அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தீண்டாமைச் சுவர் கட்டியது தொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் 15 நாட்களுக்குள் பதில் அளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.



கோவை: கோவை காமராஜபுரத்தில் தூய்மைப் பணியாளர்களின் குடியிருப்புக்கு செல்லும் வழியை அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தீண்டாமைச் சுவர் கட்டியது தொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் 15 நாட்களுக்குள் பதில் அளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.



கோவை காமராஜபுரம் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பிற்கு செல்லும் வழியை, அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு செய்து வழியை அடைத்து தூய்மைப் பணியாளர்கள் அவ்வழியாக செல்லாமல் பல ஆண்டுகளாக தடுத்து வந்ததாகவும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அதிமுக நிர்வாகியின் உதவியோடு அங்கு தீண்டாமைச் சுவர் எழுப்பி, சாலையில் இரும்புக் கூடாரம் அமைத்துள்ளதாகவும் அப்பகுதி குடியிருப்பு மக்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இதனால், இரண்டு கிலோ மீட்டர் சுற்று செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அப்பகுதி மக்கள், பொதுவழியை அடைத்து சுவர் எழுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உடனடியாக சுவரை இடித்து அகற்றி வழிப்பாதையை அமைத்துத் தரவேண்டும் என குடியிருப்பு வாசிகள் தமிழக முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையரிடம் கடந்த வாரம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த தீண்டாமைச் சுவர் எழுப்பியது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் 15 நாட்களுக்குள் பதில் அளிக்க, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.



Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...