வெளிமாநிலங்களில் இருந்து திருப்பூர் வரும் தொழிலாளர்களுக்கு ரயில் நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை!

திருப்பூர்: வெளி மாநிலங்களில் இருந்து திருப்பூர் வரும் தொழிலாளர்களுக்கு திருப்பூர் ரயில் நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


திருப்பூர்: வெளி மாநிலங்களில் இருந்து திருப்பூர் வரும் தொழிலாளர்களுக்கு திருப்பூர் ரயில் நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வந்த சூழ்நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது பல்வேறு இடங்களிலும் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திலும் பின்னலாடை மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் 100% செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன் காரணமாக வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் தற்போது திருப்பூர் மாவட்டத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு பரவாத வகையில், தீவிர கண்காணிப்பு பணிகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, இன்று மேற்கு வங்க மாநிலம் சாலிமர் பகுதியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் மூலம் திருப்பூர் வந்து இறங்கிய வெளிமாநில தொழிலாளர்களுக்கு திருப்பூர் ரயில் நிலையத்திலேயே மாநகராட்சி சுகாதாரத்துறை மூலமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தொழிலாளர்களின் தொடர்பு எண்கள் முகவரி ஆகியவை சேகரிக்கப்பட்டு வைக்கப்படுகின்றன.

மேலும், அவர்கள் செல்லும் நிறுவனங்களில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை முடிவுக்கு பின் அவர்களுக்கு பணி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...