வால்பாறையில் இரவு 7 மணிக்கு மேல் நடமாடுபவர்களை கட்டுப்படுத்த காவல்துறை வாகன சோதனை..!

கோவை: கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த வால்பாறையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இரவு 7 மணிக்கு மேல் நடமாடுபவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை வாகன சோதனை நடத்திவருகின்றனர்.


கோவை: கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த வால்பாறையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இரவு 7 மணிக்கு மேல் நடமாடுபவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை வாகன சோதனை நடத்திவருகின்றனர்.

வால்பாறையில் கொரானா பெருந்தொற்றின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக வங்கி, மளிகை, காய்கறி மற்றும் நியாயவிலைக் கடைகள் பால் மருந்தகங்கள் என பல்வேறு கடைகள் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர் முருகையா மற்றும் காவல் துறையினர் இரவு ஒளி பிரதிபலிப்பு சட்டைகளை அணிந்து சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் வாகனங்களின் எண்களை பதிவு செய்து கொள்கின்றனர். தேவையின்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வைக்கின்றனர். மீண்டும் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், இரவு 7 மணிக்கு மேல் அநாவசியமாக சாலையில் நடப்பவர்களை எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...