பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோவையில் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவை: மத்திய அரசை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மத்திய அரசை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். விலைவாசிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு தடுப்பூசிகளை விற்பனை செய்யாமல் போதிய தடுப்பூசிகளை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட எம்.பி பி.ஆர்.நடராஜன் தலைமையில் இடது சாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, உடனடியாக பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் எனவும் போதிய தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் கோசங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் பி.ஆர் நடராஜன், இடதுசாரி கட்சிகள் எடுத்த முடிவின் அடிப்படையில் 28, 29, 30 ஆகிய தேதிகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

2014ம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற போது பெட்ரோல், டீசல் என்ன விலையோ அதே விலைக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக வலியுறுத்துவதாக தெரிவித்தார். மேலும், மத்திய அரசு இயற்றிய மூன்று வேளான் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் எனவும் கொரோனா நிதியாக குடும்பங்களுக்கு 7500 வழங்கிட வேண்டும் என்றார்.



அதேபோல, தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய 12,000 கோடி ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் இந்தியாவில் போலியோ, அம்மை தடுப்பூசி போன்றவை இலவசமாக வழங்கப்பட்ட நிலையில் முதல் முறையாக கொரோனா தடுப்பூசி விலைக்கு விற்பதை ஏற்று கொள்ள முடியாது எனவும் தடுப்பூசிகள் இலவசமாகவே வழங்கப்பட வேண்டும் என்றவர், தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பாரபட்சமின்றி தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வழங்கிட வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...