கோவை: கோவை தனியார் நிறுவன மேலாளர் கொலை வழக்கில், வாலிபர் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை தனியார் நிறுவன மேலாளர் கொலை வழக்கில், வாலிபர் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை பள்ளி கரனையை சேர்ந்தவர் சாய்நாத் (48), கோவை திருச்சி சாலையிலுள்ள தனியார் நிறுவனத்தில், மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஏப்ரல் 24ல், துடியலுார்- சரவணம்பட்டி ரோட்டில் தனியார் பள்ளி அருகில் சடலமாக கிடந்தார். அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயம் இருந்தது.
பின்னர், அவரது மொபைல் போனில் வந்த, 'வாட்ஸ் ஆப்' தகவலை வைத்து விசாரித்த போது, விபசார கும்பல், அவருக்கு ஆசைகாட்டி வரவழைத்து, நகையைப் பறித்து கொலை செய்து விட்டு தப்பியது தெரியவந்தது.
மேலும், இது தொடர்பாக தரணிதரன் (23), விக்னேஷ் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். ஜாமினில் விடுவிக்க கோரி, தரணிதரன் மனு தாக்கல் செய்தார். இவர் மீது பல்வேறு வழக்கு நிலுவையில் இருப்பதால் ஜாமினில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை பள்ளி கரனையை சேர்ந்தவர் சாய்நாத் (48), கோவை திருச்சி சாலையிலுள்ள தனியார் நிறுவனத்தில், மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஏப்ரல் 24ல், துடியலுார்- சரவணம்பட்டி ரோட்டில் தனியார் பள்ளி அருகில் சடலமாக கிடந்தார். அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயம் இருந்தது.
பின்னர், அவரது மொபைல் போனில் வந்த, 'வாட்ஸ் ஆப்' தகவலை வைத்து விசாரித்த போது, விபசார கும்பல், அவருக்கு ஆசைகாட்டி வரவழைத்து, நகையைப் பறித்து கொலை செய்து விட்டு தப்பியது தெரியவந்தது.
மேலும், இது தொடர்பாக தரணிதரன் (23), விக்னேஷ் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். ஜாமினில் விடுவிக்க கோரி, தரணிதரன் மனு தாக்கல் செய்தார். இவர் மீது பல்வேறு வழக்கு நிலுவையில் இருப்பதால் ஜாமினில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.