கோவை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

கோவை: கோவை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசியை, குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.


கோவை: கோவை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசியை, குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.

பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு எஸ்.ஐ., மருது மற்றும் போலீசார் கோவை ஆர்.எஸ்.புரம் - சீரநாயக்கன்பாளையம் சந்திப்பில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆம்னி காரை சோதனையிட்ட போது ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்துவது தெரிய வந்தது.

இதனையடுத்து, ஆம்னி காரில் வந்த இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் கூறுகையில், 'குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு கூடுதல் இயக்குனர் மற்றும் எஸ்.பி., உத்தரவின் பேரில், வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆர்.எஸ்.புரம் - சீரநாயக்கன்பாளையத்தில் ஆம்னி காரை பரிசோதனை செய்த போது, 300 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், கடத்தலில் ஈடுபட்ட கேரளா சித்தூர் தாலுகா, மேனான்பாறை வளையக்காரன் சள்ளா பகுதியை சேர்ந்த அரவிந்தாக்சன் (39), கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்த ஆனந்த் (29) ஆகியோரை கைது செய்து விசாரிக்கிறோம் என்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...