கோவை: கிணத்துக்கடவு வழியாக ராமேஸ்வரம், தாம்பரம் பகுதிக்கு ரயில்கள் இயக்க வேண்டும் என, ரயில்வே சேலம் கோட்ட மேலாளரிடம் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
கோவை: கிணத்துக்கடவு வழியாக ராமேஸ்வரம், தாம்பரம் பகுதிக்கு ரயில்கள் இயக்க வேண்டும் என, ரயில்வே சேலம் கோட்ட மேலாளரிடம் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி இடையே உள்ள அகல ரயில் இருப்புப்பாதை தன்மைகள் குறித்து இன்று நவீன ரயில் மூலம் சேலம் கோட்ட மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, கிணத்துக்கடவு ரயில் நிலையத்திற்கு வந்த சேலம் கோட்ட மேலாளரிடம் கிணத்துக்கடவு வியாபாரிகள் சங்கம் மற்றும் ரயில் பயணிகள் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியதாவது:- ‘‘மேட்டுப்பாளையத்திலிருந்து கிணத்துக்கடவு வழியாக ராமேஸ்வரம் பகுதிக்கும் மற்றும் மேட்டுப்பாளையத்திலிருந்து கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, திண்டுக்கல், திருச்சி வழியாக தாம்பரத்திற்கு ரயில்கள் இயக்க வேண்டும்'' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை கிணத்துக்கடவு வியாபாரிகள் சங்க செயலாளர் தமிழ்ப்பித்தன் மற்றும் ரயில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள் மோகன்குமார், தங்கவேல், மணி ஆகியோர் வழங்கினர்.
போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி இடையே உள்ள அகல ரயில் இருப்புப்பாதை தன்மைகள் குறித்து இன்று நவீன ரயில் மூலம் சேலம் கோட்ட மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கிணத்துக்கடவு ரயில் நிலையத்திற்கு வந்த சேலம் கோட்ட மேலாளரிடம் கிணத்துக்கடவு வியாபாரிகள் சங்கம் மற்றும் ரயில் பயணிகள் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியதாவது:- ‘‘மேட்டுப்பாளையத்திலிருந்து கிணத்துக்கடவு வழியாக ராமேஸ்வரம் பகுதிக்கும் மற்றும் மேட்டுப்பாளையத்திலிருந்து கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, திண்டுக்கல், திருச்சி வழியாக தாம்பரத்திற்கு ரயில்கள் இயக்க வேண்டும்'' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை கிணத்துக்கடவு வியாபாரிகள் சங்க செயலாளர் தமிழ்ப்பித்தன் மற்றும் ரயில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள் மோகன்குமார், தங்கவேல், மணி ஆகியோர் வழங்கினர்.