கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்று பாதுகாப்புக்காக ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், இந்த ஊரடங்கைப் பயன்படுத்தி வீடுகளில் பணம் வைத்து சூதாடிய கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்று பாதுகாப்புக்காக ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், இந்த ஊரடங்கைப் பயன்படுத்தி வீடுகளில் பணம் வைத்து சூதாடிய கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
கோவையில் கொரோனா ஊரடங்கால் எல்லோரும் வீட்டிலேயே இருப்பதால், பொழுதுபோக்குக்காக வீடுகளில் சிலர் பணம் வைத்து சீட்டாடுவதாக மாநகர காவல்துறைக்கு தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் தீபக் எம்.தமோர் உத்தரவின்பேரில் காட்டூர் போலீஸார் காந்திபுரம் வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை சோதனை செய்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாடியதாக டவுன் ஹால் சங்கிலி துரை(28), செல்வபுரம் ராதாகிருஷ்ணன்(49), காந்திபுரம் சுப்பிரமணி(60), தெலுங்குபாளையம் கணேசன்(54), ஃபைவ் கார்னர் தினேஷ்(20), வி.கே.கே.மேனன் ரோடு ஜம்புலிங்கம்(48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டாட பயன்படுத்தப்பட்ட 11ஆயிரத்து 510 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைப்போல ரத்தினபுரி டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாடியதாக ரத்தினபுரியைச் சேர்ந்த பாலசுந்தரம்(65), கோவில் மேடு அஜித்(46), திருநெல்வேலி ராஜ்குமார்(46), கெம்பட்டி காலனி துரைராஜ்(44), பாப்பநாயக்கன்பாளையம் ராஜ்குமார்(46), பள்ளிக்கூட வீதி ராம்மோகன்(54), திருப்பூர் இஸ்மாயில்(45), காந்திபுரம் சுப்பிரமணி(55), கணபதி பிரகாஷ்(41) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து சீட்டாட பயன்படுத்தப்பட்ட 34 ஆயிரத்து 610 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவையில் கொரோனா ஊரடங்கால் எல்லோரும் வீட்டிலேயே இருப்பதால், பொழுதுபோக்குக்காக வீடுகளில் சிலர் பணம் வைத்து சீட்டாடுவதாக மாநகர காவல்துறைக்கு தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் தீபக் எம்.தமோர் உத்தரவின்பேரில் காட்டூர் போலீஸார் காந்திபுரம் வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை சோதனை செய்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாடியதாக டவுன் ஹால் சங்கிலி துரை(28), செல்வபுரம் ராதாகிருஷ்ணன்(49), காந்திபுரம் சுப்பிரமணி(60), தெலுங்குபாளையம் கணேசன்(54), ஃபைவ் கார்னர் தினேஷ்(20), வி.கே.கே.மேனன் ரோடு ஜம்புலிங்கம்(48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டாட பயன்படுத்தப்பட்ட 11ஆயிரத்து 510 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைப்போல ரத்தினபுரி டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாடியதாக ரத்தினபுரியைச் சேர்ந்த பாலசுந்தரம்(65), கோவில் மேடு அஜித்(46), திருநெல்வேலி ராஜ்குமார்(46), கெம்பட்டி காலனி துரைராஜ்(44), பாப்பநாயக்கன்பாளையம் ராஜ்குமார்(46), பள்ளிக்கூட வீதி ராம்மோகன்(54), திருப்பூர் இஸ்மாயில்(45), காந்திபுரம் சுப்பிரமணி(55), கணபதி பிரகாஷ்(41) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து சீட்டாட பயன்படுத்தப்பட்ட 34 ஆயிரத்து 610 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.