கோவை கோர்ட்டில் 50 சதவிகித ஊழியர்கள் பணிபுரிய அனுமதி..!

கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் முழு கட்டுப்பாட்டுக்கு வராத நிலையில், ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து கோவை கோர்ட்டில் 50 சதவிகித ஊழியர்கள் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் முழு கட்டுப்பாட்டுக்கு வராத நிலையில், ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து கோவை கோர்ட்டில் 50 சதவிகித ஊழியர்கள் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு தற்போது குறைந்து வந்தாலும், மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் முழு கட்டுக்குள் வரவில்லை. மற்ற மாவட்டங்களில், கோர்ட்களில் குறைந்த வழக்கில் நேரடி விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவை மாவட்டத்தில், வழக்கு விசாரணையில் தளர்வுகள் அளிக்கப்பப்படவில்லை. இதுதொடர்பாக, கோவை மாவட்ட நீதிபதி சக்திவேல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘அனைத்து நீதிமன்றத்திலும், முக்கிய வழக்கில் காணொலி வாயிலாக விசாரணை நடைபெறுவது, வரும் 4ம் தேதி வரை தொடரும். புதிய வழக்கை தாக்கல் செய்வோர், அதற்கான ஆவணங்களை முன்கூட்டியே டிராப் பாக்சில் போட வேண்டும். நீதிமன்ற ஊழியர்கள், சுழற்சி முறையில், 50 சதவிகிதம் பேர் பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...