கோவை: ராயல் என்ஃபீல்டு நிறுவன அறக்கட்டளை சார்பில் பொள்ளாச்சி அருகே கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இரண்டு கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டன.
கோவை: ராயல் என்ஃபீல்டு நிறுவன அறக்கட்டளை சார்பில் பொள்ளாச்சி அருகே கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இரண்டு கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டன.
இந்தியாவின் முன்னணி மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு அறக்கட்டளை சார்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தற்போது நிலவி வரும் இரண்டாம் அலை கொரோனோ பெருந்தொற்று நெருக்கடியை சமாளிக்கும் வகையில் நிவாரணமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ 2 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் செறியூட்டிகள், எக்ஸ்ரே கருவிகள், தெர்மா மீட்டர், இ.சி.ஜி கருவிகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களை வழங்கினர். மேலும் ஆக்சிஜன் சிலிண்டர், மற்றும் இதர மருத்துவ வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸும் வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட மருத்துவ சேவைகள் இணை இயக்குநர் Dr.செந்தில்குமார் மற்றும் என்.எம்.சிடி சேவை நிறுவன அறங்காவலர் சத்தியநாராயணன் கலந்துகொண்டு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் நெகமம் முன்னாள் பேரூராட்சித் தலைவர் சபரி கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் முன்னணி மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு அறக்கட்டளை சார்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தற்போது நிலவி வரும் இரண்டாம் அலை கொரோனோ பெருந்தொற்று நெருக்கடியை சமாளிக்கும் வகையில் நிவாரணமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ 2 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் செறியூட்டிகள், எக்ஸ்ரே கருவிகள், தெர்மா மீட்டர், இ.சி.ஜி கருவிகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களை வழங்கினர். மேலும் ஆக்சிஜன் சிலிண்டர், மற்றும் இதர மருத்துவ வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸும் வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட மருத்துவ சேவைகள் இணை இயக்குநர் Dr.செந்தில்குமார் மற்றும் என்.எம்.சிடி சேவை நிறுவன அறங்காவலர் சத்தியநாராயணன் கலந்துகொண்டு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் நெகமம் முன்னாள் பேரூராட்சித் தலைவர் சபரி கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.