கோவை: வால்பாறையில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகத் தேயிலைத் தோட்டப் பகுதியில் சாலை புதர் மண்டிக் கிடக்கிறது. இதனை சீரமைக்க வேண்டி கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை: வால்பாறையில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகத் தேயிலைத் தோட்டப் பகுதியில் சாலை புதர் மண்டிக் கிடக்கிறது. இதனை சீரமைக்க வேண்டி கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகத் தேயிலைத் தோட்டத்தில் உள்ள நீரார் அணை செல்லும் சாலையின் இருபுறமும் கடந்த நான்கு ஆண்டுகளாக புதர் மண்டிக் கிடக்கிறது. இதேநிலைதான் அநக்ச் சாலை வழியாகச் செல்லும் ரயான் டிவிசன் சாலையும். அதேபோன்று புதர் மண்டிக் கிடக்கும் நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தப் புதர்களை அகற்றும் பணியை மேற் கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், அப்பகுதி பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருவதைக் கருத்தில் கொண்டு, அந்த வார்டு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுதாகர் தலைமையில் பொது நலன் கருதி, அந்தப் புதர் சூழ்ந்த பகுதிகளை இன்று வெட்டி சீர்படுத்தி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், வனவிலங்குகள் அதிகமாக நடமாடும் அப்பகுதிகளில் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் முன்பு மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு நலன் கருதி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகத் தேயிலைத் தோட்டத்தில் உள்ள நீரார் அணை செல்லும் சாலையின் இருபுறமும் கடந்த நான்கு ஆண்டுகளாக புதர் மண்டிக் கிடக்கிறது. இதேநிலைதான் அநக்ச் சாலை வழியாகச் செல்லும் ரயான் டிவிசன் சாலையும். அதேபோன்று புதர் மண்டிக் கிடக்கும் நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தப் புதர்களை அகற்றும் பணியை மேற் கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், அப்பகுதி பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருவதைக் கருத்தில் கொண்டு, அந்த வார்டு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுதாகர் தலைமையில் பொது நலன் கருதி, அந்தப் புதர் சூழ்ந்த பகுதிகளை இன்று வெட்டி சீர்படுத்தி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், வனவிலங்குகள் அதிகமாக நடமாடும் அப்பகுதிகளில் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் முன்பு மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு நலன் கருதி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.