கோவை: கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமலில் இருந்தநிலையில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்குப் பின்பு கிணத்துக்கடவு காய்கறி சந்தைக்கு வியாபாரிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை: கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமலில் இருந்தநிலையில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்குப் பின்பு கிணத்துக்கடவு காய்கறி சந்தைக்கு வியாபாரிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வந்ததால் கடந்த மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு குறையாத காரணத்தால் தொடர்ந்து முழு ஊரடங்கு நீடித்து வந்தது.
இந்தநிலையில், கொரோனா காரணமாக கிணத்துக்கடவு காய்கறி சந்தைக்கு கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வராத காரணத்தால் விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகள் விற்பனை செய்யமுடியாததால் காய்கறிகள் தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டிருந்தது.

தற்போது, கோவை மாவட்டத்திற்கு பொதுமுடக்கத்தில் இருந்து கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கிணத்துக்கடவு காய்கறி சந்தைக்கு வியாபாரிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இன்று கிணத்துக்கடவு காய்கறி சந்தைக்கு கேரளா, கோவை, திருப்பூர் ஆகிய பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து, விவசாயிகள் கொண்டு வந்த தக்காளி, பச்சை மிளகாய், கொத்தவரங்காய் உள்ளிட்ட காய்கறிகளை ஏலம் எடுத்து வாங்கிச் சென்றனர்.

இதனால், இரண்டு மாதங்களுக்குப் பின்பு கிணத்துக்கடவு காய்கறி சந்தை மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வந்ததால் கடந்த மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு குறையாத காரணத்தால் தொடர்ந்து முழு ஊரடங்கு நீடித்து வந்தது.
இந்தநிலையில், கொரோனா காரணமாக கிணத்துக்கடவு காய்கறி சந்தைக்கு கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வராத காரணத்தால் விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகள் விற்பனை செய்யமுடியாததால் காய்கறிகள் தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டிருந்தது.
தற்போது, கோவை மாவட்டத்திற்கு பொதுமுடக்கத்தில் இருந்து கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கிணத்துக்கடவு காய்கறி சந்தைக்கு வியாபாரிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இன்று கிணத்துக்கடவு காய்கறி சந்தைக்கு கேரளா, கோவை, திருப்பூர் ஆகிய பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து, விவசாயிகள் கொண்டு வந்த தக்காளி, பச்சை மிளகாய், கொத்தவரங்காய் உள்ளிட்ட காய்கறிகளை ஏலம் எடுத்து வாங்கிச் சென்றனர்.
இதனால், இரண்டு மாதங்களுக்குப் பின்பு கிணத்துக்கடவு காய்கறி சந்தை மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.