கோவை: வால்பாறை அருகே தாய்முடி எஸ்டேட்டில் கரடி தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
கோவை: வால்பாறை அருகே தாய்முடி எஸ்டேட்டில் கரடி தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே தாய்முடி எஸ்டேட்டில் வசிப்பவர் பெரியசாமி வயது 66 இவர் முடீஸ் எஸ்டேட் பங்களாவில் தோட்ட வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் இவர், இன்று அந்த பங்களாவிற்கு பணிக்கு சென்று பங்களா பகுதியில் பணியில் இருந்தபோது காலை திடீரென அங்கு வந்த ஒருகரடி முதியவரை தாக்கியுள்ளது. இதில் இவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டு அலறியுள்ளார். உடனே, அந்த கரடி அவரை விட்டுவிட்டு அங்கிருந்து அருகே உள்ள தேயிலை காட்டிற்குள் ஓடியுள்ளது.

இச்சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள் கரடி தாக்கி காயமடைந்தவரை முடீஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் தகவல் அறிந்து அங்கு வந்த மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர் முன்னிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் கரடி தாக்கியதில் பெரியசாமியின் இடது கையில் சுமார் 20 தையல் போடும் அளவிற்கு காயம் ஏற்ப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் ஆரோக்கிய ராஜ் சேவியர் உத்தரவிற்கிணங்க கரடியை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே தாய்முடி எஸ்டேட்டில் வசிப்பவர் பெரியசாமி வயது 66 இவர் முடீஸ் எஸ்டேட் பங்களாவில் தோட்ட வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் இவர், இன்று அந்த பங்களாவிற்கு பணிக்கு சென்று பங்களா பகுதியில் பணியில் இருந்தபோது காலை திடீரென அங்கு வந்த ஒருகரடி முதியவரை தாக்கியுள்ளது. இதில் இவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டு அலறியுள்ளார். உடனே, அந்த கரடி அவரை விட்டுவிட்டு அங்கிருந்து அருகே உள்ள தேயிலை காட்டிற்குள் ஓடியுள்ளது.
இச்சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள் கரடி தாக்கி காயமடைந்தவரை முடீஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் தகவல் அறிந்து அங்கு வந்த மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர் முன்னிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் கரடி தாக்கியதில் பெரியசாமியின் இடது கையில் சுமார் 20 தையல் போடும் அளவிற்கு காயம் ஏற்ப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் ஆரோக்கிய ராஜ் சேவியர் உத்தரவிற்கிணங்க கரடியை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.