கொரோனா பரவலால் நிதி நெருக்கடி: கோவையில் 45 நாட்களில் 75 கோடி ரூபாய் மதிப்புள்ள 160 கிலோ தங்க நகைகள் அடமானம் மற்றும் விற்பனை!

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலால் நிதி நெருக்கடி காரணமாக கடந்த 45 நாட்களில் 75 கோடி ரூபாய் மதிப்புள்ள 160 கிலோ தங்க நகைகள் அடமானம் மற்றும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலால் நிதி நெருக்கடி காரணமாக கடந்த 45 நாட்களில் 75 கோடி ரூபாய் மதிப்புள்ள 160 கிலோ தங்க நகைகள் அடமானம் மற்றும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தொழில் நகரான கோவை தங்க நகை தயாரிப்பு தொழிலிலும் தேசிய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் பிரசித்தி பெற்று விளங்குகின்றது. கொரோனா நோய்தொற்று பரவலுக்கு முன் தினமும் சராசரியாக 200 கிலோ எடையிலான தங்கம் சுமார் 100 கோடி மதிப்பில் வணிகம் கோவை மாவட்டத்தில் நடைபெறுவது வழக்கம்.

நோய்த்தொற்று பரவல் காரணமாக தளர்வுகள் இல்லாத ஊரடங்கு கடந்த மே 10 முதல் அமல்படுத்தப்பட்டது. 45 நாட்களுக்கு பின் தற்போது சில தளர்வுகள் கோவை மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் தற்போது நகை தயாரிப்பு மட்டுமே துவங்கியுள்ளது. விற்பனை அடுத்த வாரத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நோய் தொற்று பரவல் அனைத்து தரப்பினருக்கும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதிக நிதி நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தங்களிடமுள்ள தங்க நகைகளை அடமானம் மற்றும் விற்பனை செய்துள்ளனர்.

இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது,



கோவை மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மே 10 முதல் ஜூன் 25 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 75 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 160 கிலோ எடையிலான தங்க நகைகள் அடமானம் மற்றும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பரவல் மற்ற துறைகளில் ஏற்படுத்திய தாக்கத்தை போன்றே தங்க நகை தயாரிப்பு மற்றும் விற்பனை தொழிலிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நோய் தொற்று பரவல் முதல் அலை தொடர்ந்து தினசரி விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டது.

அதில் இருந்து மீண்டு வருவதற்குள் நோய் தொற்று பாதிப்பு இரண்டாவது அலை மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இதனால் கோவை மாவட்டத்தில் இத்தொழில் வேலைவாய்ப்பு பெற்றுள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அரசு தளர்வுகள் அளித்துள்ளதை தொடர்ந்து ஆன்லைன் முறையில் சங்க உறுப்பினர்கள் அனைவரிடத்திலும் கலந்துரையாடி அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும், இன்று முதல் நகை தயாரிப்பு துவக்கி உள்ளோம். இருப்பினும் நகை விற்பனை அடுத்த வாரம் முதல் மட்டுமே துவங்கும். நிதி நெருக்கடியில் இருந்து மீண்ட பின் அடமானம் வைத்த தங்க நகைகளை மக்கள் மீட்க துவங்குவர். தவிர நகைகளை நெருக்கடியால் விற்பனை செய்த மக்கள் புதிதாக நகைகளை வாங்க ஆர்வம் காட்ட துவங்குவார்கள். எனவே, எதிர்வரும் காலம் அனைவருக்கும் நெருக்கடியில் இருந்து மீண்டு வர உதவும் வகையில் ஒரு நல்ல காலமாக அமையும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...