கிணத்துக்கடவில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 16 லிட்டர் ‘கள்' பறிமுதல் - இருவர் கைது

கோவை: தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் கிணத்துக்கடவு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நடத்திய சோதனையில் 16 லிட்டர் ‘கள்' பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் கிணத்துக்கடவு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நடத்திய சோதனையில் 16 லிட்டர் ‘கள்' பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்டனர்.

கிணத்துக்கடவு அருகே தமிழக - கேரளா எல்லைப் பகுதியான கோவிந்தநாயக்கனூர் பகுதியில் கிணத்துக்கடவு காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக நடந்து வந்த நபரை சோதனையிட்ட போது அதில் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 10 லிட்டர் ‘கள்' இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் அந்த வாலிபரை கைது செய்து விசாரித்தபோது அந்த வாலிபரின் பெயர் ரவீந்திரன் வயது (18) என்பதும், பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இதேபோல், காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து முத்தூர் பகுதியில் தனியார் தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட காவல் துறையினர் சட்ட விரோதமாக தென்னை மரங்களில் பானை கட்டி ‘கள்' இறக்கியது தெரியவந்தது. பின்னர், 6 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்த போலீஸார் அங்கிருந்த ஞானபிரகாஷ்(40) என்பவரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...