கோவை: பொள்ளாச்சியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து BSNL அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சி சார்பில், இருசக்கர வாகனத்தை கயிறு மூலம் இழுத்து நூதன போராட்டம் நடைபெற்றது.
கோவை: பொள்ளாச்சியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து BSNL அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சி சார்பில், இருசக்கர வாகனத்தை கயிறு மூலம் இழுத்து நூதன போராட்டம் நடைபெற்றது.
இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வை சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெட்ரோலின் விலை 100 ரூபாயும், டீசல் விலை 93 ரூபாய்க்கும் மேல் உயர்ந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதைக் கண்டித்து இன்று பொள்ளாச்சியில் உள்ள மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திராவிட கழகத்தினர் இணைந்து இரு சக்கர வாகனத்தை கயிறு கட்டி சாலையில் இழுத்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த 2014ஆண்டு வரை 10.39 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான வரி தற்போது 32.90 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது சாமானிய மக்களை பாதிப்பதாகவும், இதனைக் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் மீது விதிக்கப்படும் வரியைக் குறைத்து, குறைந்த விலையில் பெட்ரோல் டீசலை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வை சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெட்ரோலின் விலை 100 ரூபாயும், டீசல் விலை 93 ரூபாய்க்கும் மேல் உயர்ந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதைக் கண்டித்து இன்று பொள்ளாச்சியில் உள்ள மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திராவிட கழகத்தினர் இணைந்து இரு சக்கர வாகனத்தை கயிறு கட்டி சாலையில் இழுத்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த 2014ஆண்டு வரை 10.39 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான வரி தற்போது 32.90 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது சாமானிய மக்களை பாதிப்பதாகவும், இதனைக் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் மீது விதிக்கப்படும் வரியைக் குறைத்து, குறைந்த விலையில் பெட்ரோல் டீசலை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.