வால்பாறையில் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு... தொழிலாளர்கள் மகிழ்ச்சி..!

கோவை: வால்பாறையில் சம சீதோஷ்ண நிலையின் காரணமாக தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் சம சீதோஷ்ண நிலையின் காரணமாக தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இந்த தேயிலைத் தோட்டங்களில் தமிழகம் கேரளம் மற்றும் வட மாநிலங்களான அஸ்ஸாம், ஜார்க்கண்ட், பீகார் போன்ற பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த இரண்டு வாரங்களாக வால்பாறை பகுதியில் மாறி மாறி மழை பெய்து வெயில் அடித்து வந்தது. மேலும், தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் தேயிலைச் செடிக்கு தேவையான உரங்களைப் போட்டு பணிகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக தற்போது அடிக்கும் வெயிலில் தேயிலைச் செடிகளின் குருத்து இலை அதிகரித்து தேயிலை மகசூல் கூடி உள்ளது.



இதன் காரணமாக, தேயிலைத் தோட்டங்களில் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. தேயிலை உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு பல்வேறு பணிகள் அதிகம் கிடைத்து வருகின்றன. இதனால், அதிகப்படியான கொழுந்து பறித்தல், உரம் போடுதல், மருந்து அடித்தல் பணிகளால் அதிகப்படியான வருவாயும் கிடைக்கிறது. இது தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...