பணமில்லா வர்த்தகம் குறித்து தியாகி குமரன் மார்கெட்டில் வானதி ஸ்ரீனிவாசன் பிரச்சாரம்.


சிறிய காய்கறி கடைகளில் பணமில்லா வர்த்தகம்  செய்வது குறித்து பா.ஜ.க மாநில பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் வங்கி அதிகாரிகளுடன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பணமில்லா வர்த்தகம் மேற்கொள்ளும் முறையை பின்பற்றும் பொருட்டு பா.ஜ.க சார்பாக கோவை தியாகி குமரன் மார்கெட்டில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டு, காய்கறி வியாபாரிகளிடம் இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தி உள்ள கியூ ஆர் கோடு  பயன்படுத்தி விற்பனை செய்வது குறித்து விளக்கம் அளித்தனர். 

இதன் மூலம் வியாபாரிகளின் இந்தியன் வங்கி கணக்கில் இருந்து உருவாக்கிய கியூ. ஆர் கோட்டில், வாடிக்கையாளர்கள் தங்கள் இந்தியன் வங்கி ஆப் மூலம் ஸ்கேன் செய்து , பணமில்லா பரிவர்த்தனையில் ஈடுபடலாம் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திராத வாடிக்கையாளர்களும் இச்சேவையை பயன்படும் வகையில் ஆப் உருவாக்கும் முறையில் இந்தியன் வங்கி ஈடுபட்டு வருவதாகவும் , வங்கியில் கணக்கு இல்லா வியாபாரிகளுக்கு வங்கி கணக்கு துவங்க பா.ஜ.க நிர்வாகிகள் சார்பாக உதவிகள் மேற்கொள்ளப்படும் என வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...