கோவை: வால்பாறையின் பிரதான சாலைகளில் கேட்பாரற்று சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சப்படுவதோடு, உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை: வால்பாறையின் பிரதான சாலைகளில் கேட்பாரற்று சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சப்படுவதோடு, உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பிரதான சாலை ஒன்று உள்ளது. இவ்வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்களும் பொதுமக்களும் பயணிக்கின்றனர். இந்தநிலையில், வால்பாறையில் ஒரு சிலரால் வளர்க்கப்படும் ஆடுகள், பசு மாடுகள் மற்றும் எருமை மாடுகள் வால்பாறையின் பிரதான சாலையிலேயே வலம் வருகின்றன. குறிப்பாக, புதிய பேருந்து நிலையத்திலிருந்து காந்தி சிலை பழைய பேருந்து நிலையம் வரை சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இப்படி கேட்பாரற்று சுற்றித் திரியும் கால்நடைகள் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை முட்ட வந்து அச்சுறுத்துகின்றன.
மேலும் வாகனங்களுக்கு முன் குறுக்கும் நெடுக்குமாக சென்று போக்குவரத்திற்கு இடையூறு செய்கின்றன. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, வால்பாறை நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பிரதான சாலை ஒன்று உள்ளது. இவ்வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்களும் பொதுமக்களும் பயணிக்கின்றனர். இந்தநிலையில், வால்பாறையில் ஒரு சிலரால் வளர்க்கப்படும் ஆடுகள், பசு மாடுகள் மற்றும் எருமை மாடுகள் வால்பாறையின் பிரதான சாலையிலேயே வலம் வருகின்றன. குறிப்பாக, புதிய பேருந்து நிலையத்திலிருந்து காந்தி சிலை பழைய பேருந்து நிலையம் வரை சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இப்படி கேட்பாரற்று சுற்றித் திரியும் கால்நடைகள் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை முட்ட வந்து அச்சுறுத்துகின்றன.
மேலும் வாகனங்களுக்கு முன் குறுக்கும் நெடுக்குமாக சென்று போக்குவரத்திற்கு இடையூறு செய்கின்றன. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, வால்பாறை நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.