கோவை: கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து, வால்பாறையில் பொதுப் போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளிக்கும் நிலையில் அரசு பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன.
கோவை: கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து, வால்பாறையில் பொதுப் போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளிக்கும் நிலையில் அரசு பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன.
கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது. இந்த அரசு பேருந்துகளைப் பராமரிக்க அரசு போக்குவரத்து கழக பணிமனை இயங்கிவருகிறது. இங்கு 39 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வால்பாறையில் இருந்து தேயிலைத் தோட்டப் பகுதிகளான முடீஸ், பண்ணி மேடு, சோலையார் அணை, சேக்கல் முடி, வில்லோனி, சின்கோனா, சின்னக்கல்லார், கருமலை பாலாஜி கோயில், பழனி, திருப்பூர், கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், கடந்த ஒரு மாத காலமாக கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்ட காரணத்தினால் பேருந்துகள் அனைத்தும் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், பொது போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அரசு போக்குவரத்து கழக நிர்வாகிகள் பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளிக்கும் நிலையில் உடனடியாக பேருந்துகளை இயக்க அனைத்து பேருந்துகளையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது. இந்த அரசு பேருந்துகளைப் பராமரிக்க அரசு போக்குவரத்து கழக பணிமனை இயங்கிவருகிறது. இங்கு 39 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வால்பாறையில் இருந்து தேயிலைத் தோட்டப் பகுதிகளான முடீஸ், பண்ணி மேடு, சோலையார் அணை, சேக்கல் முடி, வில்லோனி, சின்கோனா, சின்னக்கல்லார், கருமலை பாலாஜி கோயில், பழனி, திருப்பூர், கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், கடந்த ஒரு மாத காலமாக கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்ட காரணத்தினால் பேருந்துகள் அனைத்தும் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், பொது போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அரசு போக்குவரத்து கழக நிர்வாகிகள் பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளிக்கும் நிலையில் உடனடியாக பேருந்துகளை இயக்க அனைத்து பேருந்துகளையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.