வால்பாறையில் பொதுப் போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளிக்கும் நிலையில் அரசு பேருந்துகள் தயார்..!

கோவை: கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து, வால்பாறையில் பொதுப் போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளிக்கும் நிலையில் அரசு பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன.


கோவை: கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து, வால்பாறையில் பொதுப் போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளிக்கும் நிலையில் அரசு பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன.

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது. இந்த அரசு பேருந்துகளைப் பராமரிக்க அரசு போக்குவரத்து கழக பணிமனை இயங்கிவருகிறது. இங்கு 39 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வால்பாறையில் இருந்து தேயிலைத் தோட்டப் பகுதிகளான முடீஸ், பண்ணி மேடு, சோலையார் அணை, சேக்கல் முடி, வில்லோனி, சின்கோனா, சின்னக்கல்லார், கருமலை பாலாஜி கோயில், பழனி, திருப்பூர், கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், கடந்த ஒரு மாத காலமாக கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்ட காரணத்தினால் பேருந்துகள் அனைத்தும் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், பொது போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அரசு போக்குவரத்து கழக நிர்வாகிகள் பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளிக்கும் நிலையில் உடனடியாக பேருந்துகளை இயக்க அனைத்து பேருந்துகளையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...