கேரளாவில் இருந்து கோவைக்கு ரயில் மூலம் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது!

கோவை: கேரளாவில் இருந்து ரயில் மூலம் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கேரளாவில் இருந்து ரயில் மூலம் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கேரளாவில் மதுக்கடைகள் திறந்து உள்ளதால் அங்கிருந்து கார் இருசக்கர வாகனம் மற்றும் ரயில்களில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு, கோவையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று கேரள மாநிலத்தில் இருந்து கோவை வந்த ஒரு ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் தெரியவந்தது.

இதையடுத்து, கோவை ரயில்வே போலீசார் அந்த ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது, அந்த ரயிலில் வந்த 3 பேரிடம் 17 மதுபாட்டில்கள் இருந்தது.

இதனை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், பிடிபட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...