கோவை: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கட்டணத்தில் 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்குவதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கோவை: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கட்டணத்தில் 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்குவதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் கூறியதாவது, ‘‘தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் வலைத்தளத்தில் கேட்கப்படும் தகவல்களை பயணிகள் பூர்த்தி செய்து டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். ஒரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி அதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.
மேலும், இந்த சலுகை ஆன்லைன் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும். விதிமுறைகளுக்கு உட்பட்டது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லாததால், இதுவரை யாரும் இந்த சலுகையை பயன்படுத்தவில்லை. மேலும், அவர்களுக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் வலைத்தளம் அல்லது பயணிகள் சேவை மைய தொலைபேசி எண்களில் பயணிகள் தொடர்பு கொள்ளலாம்'' என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் கூறியதாவது, ‘‘தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் வலைத்தளத்தில் கேட்கப்படும் தகவல்களை பயணிகள் பூர்த்தி செய்து டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். ஒரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி அதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.
மேலும், இந்த சலுகை ஆன்லைன் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும். விதிமுறைகளுக்கு உட்பட்டது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லாததால், இதுவரை யாரும் இந்த சலுகையை பயன்படுத்தவில்லை. மேலும், அவர்களுக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் வலைத்தளம் அல்லது பயணிகள் சேவை மைய தொலைபேசி எண்களில் பயணிகள் தொடர்பு கொள்ளலாம்'' என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.