கோவை: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், பொள்ளாச்சியில் காவல்துறை பல்வேறு இடங்களில் நடத்திய வாகன தணிக்கையில் 65 லிட்டர் கேரளா மதுபானங்கள் மற்றும் 8 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், பொள்ளாச்சியில் காவல்துறை பல்வேறு இடங்களில் நடத்திய வாகன தணிக்கையில் 65 லிட்டர் கேரளா மதுபானங்கள் மற்றும் 8 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது. இந்தநிலையில், அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிலர் சட்டவிரோதமாக மதுபானங்கள் வாங்கி வந்து, பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதுக்கி விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில், பொள்ளாச்சி காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்மணி தலைமையில், தீவிர வாகனத் தணிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று பொள்ளாச்சி வடக்கிபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வாகன தணிக்கையில் ஐந்து பேரிடமும், தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 20 பேரிடமும் இருந்து, 65.425 லிட்டர் கேரள மதுபானங்கள் மற்றும் 8 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பாக, 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பகுதியில் தொடர்ந்து வாகன தணிக்கைகள் நடைபெறும் என்றும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது. இந்தநிலையில், அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிலர் சட்டவிரோதமாக மதுபானங்கள் வாங்கி வந்து, பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதுக்கி விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில், பொள்ளாச்சி காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்மணி தலைமையில், தீவிர வாகனத் தணிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று பொள்ளாச்சி வடக்கிபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வாகன தணிக்கையில் ஐந்து பேரிடமும், தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 20 பேரிடமும் இருந்து, 65.425 லிட்டர் கேரள மதுபானங்கள் மற்றும் 8 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பாக, 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பகுதியில் தொடர்ந்து வாகன தணிக்கைகள் நடைபெறும் என்றும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.